BREAKING: முஸ்லிகளின் கொரோனா விவகாரம்; உடலை அடக்கம் செய்ய அனுமதியளித்த வர்த்தமானி தயார் நிலையில்??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: முஸ்லிகளின் கொரோனா விவகாரம்; உடலை அடக்கம் செய்ய அனுமதியளித்த வர்த்தமானி தயார் நிலையில்??



வெளியான வர்த்தமானி அறிவித்தல்: https://www.yazhnews.com/2021/02/gazetted.html

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு இன்று (25) வெளியிடப்படவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளது.


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 


$ads={1}


கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


இதன் அடிப்படையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதாரத்துறையின் இறுதி பரிந்துரைக்குப் பின்னர் வழங்கப்பட உள்ளது. கொரோனா அடக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சுகாதாரத் துறைக்கும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 


இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா அடக்கம் செய்ய அனுமதி வழங்க சுகாதாரத் துறை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


எம்.எம் அஹ்மத்


வெளியான வர்த்தமானி அறிவித்தல் : https://www.yazhnews.com/2021/02/gazetted.html


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.