குழந்தையை மோசமாக தாக்கிய நபரும் பெண்களும் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குழந்தையை மோசமாக தாக்கிய நபரும் பெண்களும் கைது!


நேற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 4 வயதுச் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர், புல்மோடை – ஆசிரிமலை பகுதியில் வைத்து இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த தாக்குதலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், 37 மற்றும் 46 வயதான இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் மணலாறு (வெலிஓயா) – கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.


தாக்குதலுக்கு இலக்கான நான்கரை வயதுச் சிறுவனை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்து, சட்ட வைத்திய அதிகாரிக்கு முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புல்மோடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.