சாதாரண தர பரீட்சை வினாத்தாளை வட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர பரீட்சை வினாத்தாளை வட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த ஆசிரியர் கைது!


கண்டி பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் இன்று (12) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் . 


கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வினாத்தாளைப் பகிர்ந்த வட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழி பரீட்சை காலை 8.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. 


எனினும், இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உதவி ஆசிரியர் இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.