திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் போதைப்பொருளுடன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் போதைப்பொருளுடன் கைது!


முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மொரட்டுவை கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவரிடமிருந்து 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, எகொட உயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இவரால் திருடப்பட்டுக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முச்சக்கர வண்டி கேசட் பிளேயர் மற்றும் இரண்டு கையடக்க தொலைசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.