மலேசியாவில் சுடுநீர் கொதிகலன் விழுந்து உயிரிழந்த இலங்கை இளைஞன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மலேசியாவில் சுடுநீர் கொதிகலன் விழுந்து உயிரிழந்த இலங்கை இளைஞன்!


மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் சுடுநீர் கொதிகலன் விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


மஸ்கெலியா  பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.


அங்கு இந்த இளைஞன் அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலன் தவறுதலாக உடல் மீது விழுந்து நீர் ஊற்றப்பட்டதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 


சுடுநீரில் உடலின் ஊற்றியதில் பலத்த காயங்களுடன் மலேசியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.