சாதாரண தர மாணவர்கள் உயர்தர கல்வி நடவடிக்கைகளை தொடர்வது தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தர மாணவர்கள் உயர்தர கல்வி நடவடிக்கைகளை தொடர்வது தொடர்பான அறிவித்தல்!


உயர்தர கல்வி நடவடிக்கைகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கான கல்விப் பணிகள் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாமதமான பாடசாலை கல்வி பாடத்திட்டத்தை உள்ளடக்கும் கல்வி அமைச்சின் முயற்சியின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.


எதிர்காலத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் போன்ற அரச பாடசாலைப் பரீட்சைகளின் கால எல்லையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான அமைச்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


பாடசாலை மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதியில் ஏற்படும் காலதாமதத்தை தடுப்பதற்காகவும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.