இலங்கையின் மிக உயரமான நபர் தொடர்பில் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் மிக உயரமான நபர் தொடர்பில் வெளியான தகவல்!


முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இலங்கையின் மிக உயரமான நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


பிபிசி சிங்கள சேவையின் படி, புதுக்குடியிருப்பு கைவேலியில் வசிக்கும், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான குணசிங்கம் கசேந்திரன் ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்டவர்.


தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதாக அவர் தெரிவிக்கிறார். இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை காணமுடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இரண்டு பிள்ளைகளின் தந்தையான கசேந்திரன், பேருந்தில் இருக்கை கிடைக்காத வரையில் பயணிக்க முடியாது என்றும், நீண்ட தூர பேருந்தில் பயணித்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறுகிறார்.


முச்சக்கர வண்டி ஓட்டுநரான கசேந்திரன் தனது வாகனத்தை அவர் கழுத்தை வளைத்தே ஓட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.