மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் பலி; மனைவி படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் பலி; மனைவி படுகாயம்!


மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர் மொனராகலை - நக்கல பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண்ணாவார்.


குடும்ப தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபர் தனது மாமியாரையும் மனைவியையும் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மனைவி மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.