தங்கம் கடத்திய எம்.பிக்கு வழங்கப்பட்ட தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கம் கடத்திய எம்.பிக்கு வழங்கப்பட்ட தண்டனை!


பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அலி சப்ரி ரஹீமுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு சபாநாயகரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டது.


இது தொடர்பில் சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில்,


2023 ஆம் ஆண்டு அலி ஷப்ரி ரஹீம் உங்களுக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமாக 70 மில்லியனுக்கும் அதிக தங்கம் மற்றும் தொலைப்பேசிகளை கொண்டுவந்தமையை நீங்கள் ஏற்றுக் கொண்டதாலும், அந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு இலங்கை சுங்கத்தினால் உங்களுக்கு 75 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு, அவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.


இந்த செயற்பாடு காரணமாகவும் மக்களுக்காக சேவையாற்றும் ஒருவர் மக்களின் பணத்தை தவறான விதத்தில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டமைக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுகிறது என்றார்.


இந்நிலையில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப் பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.