சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் அடங்கிய பட்டியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் அடங்கிய பட்டியல்!


சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பங்களின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நபர்களின் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.


குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஓரளவு வளர்ச்சி காணப்படுவதாகவும் அமரசிங்க குறிப்பிட்டார்.


இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது 2023 ஆம் ஆண்டில் 1,639 ஆக காணப்படுகின்றது.


2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் சீண்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் உதய குமார அமரசிங்க மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.