ஐவர் சுட்டுக்கொலை: சந்தேக நபரின் SUV கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐவர் சுட்டுக்கொலை: சந்தேக நபரின் SUV கண்டுபிடிப்பு!


கடந்த திங்கட்கிழமை (22) பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.


காலி வித்யாலோக பிரிவேனாவிற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் இந்த SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மாத்தறையில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினால் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. 


பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எமது மக்கள் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


பெலியத்தவில் தெற்கு அதிவேக சாலையில் இருந்து வெளியேறி சிற்றுண்டி சாப்பிடுவதற்காக நின்றிருந்த டிபென்டரில் பயணித்தவர்களை பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 


சந்தேகநபர்கள் பின்னர் அதே SUV வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர், அது இப்போது காலியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


அதேநேரம் கடந்த வருடம் தங்காலையில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.