நேபாள விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேபாள விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு!


கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் நேபாள சர்வதேச விமான நிலையங்களில் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் நிஜ்கத் விமான நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், திரிபுவன், கௌதம புத்தா மற்றும் பொக்ரா சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க எதிர்பார்ப்பதாகவும் நேபாள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் கூறியதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. .

ஒரு வருடத்தில் 1.5 டிரில்லியன் ரூபா செலவில் 1,933 ஹெக்டேர் பரப்பளவில் நிஜ்கத் விமான நிலையத்தை உருவாக்க அதானி குழுமம் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

அதானி குழுமம் தற்போது இந்தியாவில் 7 விமான நிலையங்களை இயக்குகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.