சனத் நிஷாந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சனத் நிஷாந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய!

அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மஹிந்தானந்த அளுத்கமகேயும் சென்றிருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பல அரசியல்வாதிகளும் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் மக்கள் இறுதி அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று அவரது சொந்த ஊரான புத்தளம் ஆராச்சிக்கட்டுவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) அவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது.





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.