அதிவேக நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு; ஐவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு; ஐவர் பலி!


தங்காலை, பெலியத்த பகுதியில் டிபென்டர் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்  5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் இன்று (22) அதிகாலை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்து வாகனத்தில் பயணித்த ஐவரில் நால்வர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து பேரில் அபே ஜனபல கட்சியின் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பாதாள உலகக் குற்றவாளியான கொஸ்கொட சுஜீயின் கும்பலே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.