விசா, கடவுச்சீட்டு உள்ளிட்ட போலி ஆவணங்கள் வழங்கிய இளம் இளைஞர்கள் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசா, கடவுச்சீட்டு உள்ளிட்ட போலி ஆவணங்கள் வழங்கிய இளம் இளைஞர்கள் இருவர் கைது!


பன்னல பகுதியில் போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை வழங்கும் பாரியளவிலான மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து இரண்டு இளம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பன்னல எலபடகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் புதன்கிழமை (20) வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதுடைய பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 


எலபடகம பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், நீண்டகாலமாக போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேகநபர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 8 பிரிண்டர்கள், இரண்டு கைத்தொலைபேசிகள், இரண்டு பென் டிரைவ்கள், இரண்டு காசோலை இயந்திரங்கள், ஒரு UPS, 24 கடவுச்சீட்டுகள் மற்றும் பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்) 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.