மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த 29 வயது ஆசிரியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த 29 வயது ஆசிரியர்!

பாடசாலை மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபாட ஆசிரியர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.


கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவிகள் மூவரும்  கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.