நாம் சிங்கத்தை போன்றவர்கள்; எம்மீது கல் ஏரியாதீர்கள்! எச்சரிக்கை விடுத்த பசில் ராஜபக்ஷ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் சிங்கத்தை போன்றவர்கள்; எம்மீது கல் ஏரியாதீர்கள்! எச்சரிக்கை விடுத்த பசில் ராஜபக்ஷ!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய எம்.பி. பசில் ராஜபக்ஷ, இலங்கையில் ஆட்சிக்கு வரும் அடுத்த அரசாங்கம் SLPP தலைமையிலான அரசாங்கமாக இருக்கும் என்றார்.


“நாங்கள் சிங்கத்தைப் போன்றவர்கள். நம் மீது கல் எறியப்பட்டால் திரும்பிப் பார்த்து அது யார் என்று பார்ப்போம். எங்கள் மீது கற்களை எறியாதீர்கள். இனிவரும் காலங்களில் பார்த்துக்கொள்வோம்” என்று எச்சரித்தார்.


அடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்தைப் போன்று அல்லாமல் பலமாக அமையும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.


“எந்த தேர்தல் நடந்தாலும் SLPP எல்லா தேர்தலிலும் வெற்றி பெறும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் தயாராவோம்” என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.