புதிய நாட்டிற்காக அணிதிரளுமாறு அனைவருக்கும் அழைப்பு - மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய நாட்டிற்காக அணிதிரளுமாறு அனைவருக்கும் அழைப்பு - மஹிந்த


புதிய நாட்டை உருவாக்குவதற்கு சாதி, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, பொய்களை பரப்ப முயலும் நபர்களிடத்தில் அமைதியாக காத்திருக்க இனி தேவையில்லை என கூறினார்.

எந்த சக்திகள் வந்தாலும் நாளைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் பலமான சக்தியாக மாறும் எனவும், அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன மிகவும் பலம் வாய்ந்த முகாமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.