நாட்டில் 35 ரூபாய்க்கு முட்டை விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 35 ரூபாய்க்கு முட்டை விநியோகம்!


இறக்குமதி செய்யப்படும் முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.


அத்துடன், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.


சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் முட்டை விலையை உயர்த்தினால், அரசாங்கத்தின் பதிலில் மாற்றம் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.