தேசிய முய் தாய் சாம்பியன்ஷிப் போட்டி 2023 - அதிர வைத்த IMA

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய முய் தாய் சாம்பியன்ஷிப் போட்டி 2023 - அதிர வைத்த IMA

நான்காவது தேசிய மட்ட முய் தாய் சாம்பியன்ஷிப் - (Muay Thai National Championship 2023) போட்டிகள் இவ்வருடம் நவம்பர் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது, இலங்கை முய் தாய் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போட்டியில் இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி முய் தாய் கலகங்களான, இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை மற்றும் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) உற்பட 29 கலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600இற்கும் அதிகமான முய் தாய் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்,

இப்போட்டித்தொடரின் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 3ம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது ராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க அவர்கள், 12 சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி வைத்தார், இவற்றுள் 06 விருதுகளை இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி முய் தாய் கலகமான IMA Sri Lanka கழகம் சுவீகரித்தம்மை சிறப்பம்சமாகும், இக்கழகத்தின் வீரர்களை இலங்கையில் முன்னனி மற்றும் முய் தாய் தொடர்பான அதிக அனுபவத்தை கொண்ட M.H.M FAHID அவர்கள் பயிற்றுவித்து வருகிறார்.

இப்போட்டித்தொடரில் 12, 14, 16, 18, 23 கீழ் மற்றும் 40 கீழ் ஆகிய வயதெல்லைகளுக்குரிய முய் தாய் வீரர்கள் கலந்துகொண்டனர், 119 வீரர்கள் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதிக பதக்கங்களை வென்றெடுத்தனர்,

பதக்க விபரம் : 
  • தங்கம் 45
  • வெள்ளி 22
  • வெண்கலம் 36

செய்தி : மொஹமட் நுஸ்ரத் / செயலாளர் IMA Sri Lanka




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.