முடிவுக்கு வரும் மூன்றாம் உலகப் போர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடிவுக்கு வரும் மூன்றாம் உலகப் போர்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை கபில்தேவ் தலைமையில் ஜூன் 25 ,1983 வென்றது. இந்தியாவின் 2- வது உலக கோப்பையை தோனி தலைமையில் 2011 - ல் வெற்றி பெற்றது . தற்போது மூன்றாம் உலகக் கோப்பை வெற்றியை நோக்கி இந்திய அணி அரையிறுதி போட்டியில் வெற்றி வாகை சூடி இறுதி போட்டியை இன்று ஆஸ்திரேலிய அணியுடன் எதிர்கொள்கிறது.உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி ( 1987, 1999, 2003, 2007, 2015) ‌என 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 5 முறை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக நடைப்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று நவம்பர் 19 தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா 9 பேட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ,18 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 9 போட்டியில் 7 -போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.