பிக்குவினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பலியானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிக்குவினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பலியானார்!


தேரர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பல்லேகமவில் உள்ள விஹாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவர் கடந்த 16ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.


இதனால் பலத்த காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.


இந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேக நபரான தேரரின் சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்தமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான தேரர் தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.