“காசாவில் சிறுவர்களை கொல்வதை நிறுத்து” என்ற போராட்டம் கொழும்பில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“காசாவில் சிறுவர்களை கொல்வதை நிறுத்து” என்ற போராட்டம் கொழும்பில்!

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவி வரும் மோதலை நிறுத்தக் கோரி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக திங்கட்கிழமை (நவம்பர் 20) மௌனப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் காஸாவில் மோதல் காரணமாக குழந்தைகள் இறப்பதைத் தடுக்க ஐ.நா மற்றும் பிற உலக அதிகாரிகளுக்குத் தலையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த மௌன ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய காணாமல் போன இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, “ஐக்கிய நாடுகள் சபையோ ஏனைய நபர்களோ போரை நிறுத்துவதற்கோ சிறுவர்கள், பெண்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதிலோ தலையிடவில்லை".  


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.