குவாஸி நீதிபதி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குவாஸி நீதிபதி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!


கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் 7,500 ரூபா லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.


லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நீதிபதி கைது செய்யப்பட்டார். 


மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் நபரொருவரின் இரண்டாவது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வ பிரிவினையை உறுதிப்படுத்தும் வகையில் முறைப்பாட்டாளரிடம் விவாகரத்து ஆவணங்களை வழங்குவதற்கு 7,500 ரூபா லஞ்சம் கோரியுள்ளார்.


தெமட்டகொடவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்றத்தில் இலஞ்சம் வாங்கும் போதே நீதிபதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.