இலங்கையின் கடன் மீட்பு வேலைத்திட்டம் வேகமாக நடந்து வருகிறது - இந்திய நிதி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் கடன் மீட்பு வேலைத்திட்டம் வேகமாக நடந்து வருகிறது - இந்திய நிதி அமைச்சர்

மற்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கடன் மீட்பு வேலைத்திட்டம் மிக வேகமாக நடைபெற்று வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் மொராக்கோவின் மராகேஷில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மத்தியதர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கை நெருக்கடி நிலை காரணமாக குறைந்த வருமானம் பெறும் நாடாக மாறியதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எந்தவொரு நாட்டிற்கும் பொருந்தும் வகையில் இலங்கையின் நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், மிக விரைவாக தீர்வுகளை வழங்குவதன் மூலம் அதே முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.