விமானத்தில் வெடிகுண்டு - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமானத்தில் வெடிகுண்டு - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சிங்கப்பூரில் இருந்து பெர்த் (அவுஸ்திரேலியா) நோக்கி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிஆர் 16 என்ற விமானம் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 04.10 மணிக்கு தனது பயணத்தை தொடங்கியது.

சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, சந்தேக நபர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.

பின்னர் 02 போர் விமானங்களின் பாதுகாப்புடன் விமானம் சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியர் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், விமானத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.