க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தல்!


2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இன்று (14) முதல் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அத்துடன், இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


www.ugc.ac.lk என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.