12 வயது சிறுமியின் கொலை; 63 வயது பாட்டி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

12 வயது சிறுமியின் கொலை; 63 வயது பாட்டி கைது!


யாழ், கோப்பாய், திரணவெளி பகுதியில் 12 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


மூடிய அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறைக்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கடந்த செவ்வாய்கிழமை (12) கப்பாய் பொலிசார் பல நாட்களுக்கு முன்னர் இறந்த ஒரு குழந்தையின் சடலத்தை ஒரு படுக்கையிலும், சுயநினைவற்ற ஒரு பெண் மற்றொரு படுக்கையிலும் அதே அறையில் கண்டெடுத்தனர். 


உயிரிழந்தவர் திருகோணமலை, பள்ளிய வீதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பொலிஸ் பாதுகாப்பில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 


முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட குழந்தை தனது மகளின் முதல் திருமணத்தின் பேத்தி என்பது தெரியவந்துள்ளது. 


பெண்ணும் குழந்தையும் கடந்த சனிக்கிழமை (09) குறித்த விடுதிக்கு தங்க வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பெண், அதன்பிறகு, இன்சுலின் செலுத்தி, குழந்தைக்கு 10 தூக்க மாத்திரைகளை சாப்பிடச் செய்து, கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்ததில் உயிர் பிழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.