திருடிய திருடனைத் தாக்க முடியுமா? பொலிஸார் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருடிய திருடனைத் தாக்க முடியுமா? பொலிஸார் விளக்கம்!


பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட எந்த ஒரு விற்பனை நிலையங்களிலும் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அந்த தரப்பினரைக் கட்டுப்படுத்தி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.


பொருட்களை திருடிய குற்றத்திற்காக சட்டத்திற்கு மாறாக எவரையும் தாக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,


"உங்கள் நிறுவனத்தில் ஒரு பொருள் திருடப்படுவதைக் கண்டால், உங்களிடம் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளனர், குறிப்பாக அது ஒரு பல்பொருள் அங்காடியாக இருந்தால், அந்த நபரைக் கட்டுப்படுத்தி, பொலிஸாருக்கு அறிவிக்கவும். இதற்கு மாறாக தாக்குதல் நடத்துதல் மாற்று வழி இல்லை. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 


தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களே சந்தேக நபர்களாக கருதப்பட்டு கைது செய்யப்படுவர். அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படும். இதுகுறித்து அவ்வாறான நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நிறுவனத்தில் தவறு செய்பவர்கள் காணப்படுவார்களாயின், பாதுகாப்புப் பிரிவின் மூலம் கட்டுப்படுத்தி, பொலிஸாருக்கு அறிவிக்கவும்" என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.