கடற்கரையில் மீட்கப்பட்ட ஒரு நாளான சிசுவின் சடலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடற்கரையில் மீட்கப்பட்ட ஒரு நாளான சிசுவின் சடலம்!


சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துப்பந்திய கடற்கரையில் சிசுவொன்றின் சடலம் நேற்றைய தினம் (24)  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த சடலமானது, பிறந்து ஒரு நாளான சிசுவுடையதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


முத்துப்பந்திய கடற்கரையில் இனந்தெரியாத இந்த சிசுவின் சடலத்தை மீனவர் ஒருவர் பார்த்து பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இதற்கிடையில், ஹலவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹலவத்தை தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.