30 கோடி பெறுமதியான கோகோயின்; பிஸ்கட் டின்னில் எடுத்து வந்த நபர் சிக்கினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

30 கோடி பெறுமதியான கோகோயின்; பிஸ்கட் டின்னில் எடுத்து வந்த நபர் சிக்கினார்!


இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான கோகோயின் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கென்யா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரும் நுழைவாயிலில் வைத்து, நேற்று (24) இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விமான நிலைய சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. 


கென்யா நாட்டைச் சேர்ந்த 26 வயதான இவர், மோட்டார் வாகனங்களை விற்பனைச் செய்யும் வர்த்தகராவார். 


இந்தோனேசியா அடிஸ்அபாபாவில் இருந்து கட்டார் சென்று, அங்கிருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR654 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 


அவரினால் கொண்டுவரப்பட்ட பயணப்பையில் குக்கீஸ் பிஸ்கட் அடங்கிய மூன்று டின்கள் இருந்துள்ளன. அதில் 4 கிலோகிராம் நிறையைக் கொண்ட கோகோயின் போதைப்பொருள் குளிசைகள் 180யை மறைத்து வைத்து வந்துள்ளார். 


எவ்விதமான விபரங்களையும் தெரிவிக்காது கிரின் செனல் ஊடாக விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முயன்றபோதே, சுங்க அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்த சந்தர்ப்பத்தில் கண்காணிப்பதற்காக, சுங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொடவும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தார். 


கைது செய்யப்பட்ட கென்ய பிரஜை, இலங்கைக்கு முதன்முறையாக வருகைதந்துள்ளார். இவர் தொடர்பில்   போதைப்பொருள் சுங்க கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு சர்வதேச புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன. 


அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.