புகழ்பெற்ற சியர்லீடர் பெர்சி அபேசேகரவுக்கு 5 மில்லியன் ரூபாவை வழங்கிய இலங்கை கிரிக்கெட்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகழ்பெற்ற சியர்லீடர் பெர்சி அபேசேகரவுக்கு 5 மில்லியன் ரூபாவை வழங்கிய இலங்கை கிரிக்கெட்!


கிரிக்கெட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற சியர்லீடர் பேர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.


அபேசேகரவின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடை அவருக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 


இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. 


"சியர் லீடராக இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது, மேலும் அவர் வீரர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் கோபுரமாக இருந்துள்ளார், மேலும் அவரது நல்வாழ்வைக் கவனித்துக் கொள்வது எங்களின் கடமை" என இலங்கை கிரிக்கெட்டின் கௌரவ செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். 


பெர்சி அபேசேகரவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா அவரை சந்தித்த போது அவர்களினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.