முச்சக்கர வண்டி சாரதியின் தலையில் தாக்கி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டி சாரதியின் தலையில் தாக்கி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளை!


முச்சக்கர வண்டியின் சாரதியின் தலையில் சுத்தியலால் தாக்கி அவரின் கழுத்திலிருந்த  தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற  இளைஞர் ஒருவரை அலவத்துகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக பிரதேசவாசிகளுக்கு அறிவித்ததையடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.


இதன்போது சந்தேக நபர் ஆட்டோ சாரதியிடமிருந்து கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை வயலில் வீசி எறிந்த நிலையில் அதனைப் பொலிஸார் மீட்டனர்.


இந்த தங்கச் சங்கிலியின் பெறுமதி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என அலவத்துகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.