நடிகர் விஜய் ஆன்டனியின் மகள் தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடிகர் விஜய் ஆன்டனியின் மகள் தற்கொலை!


இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் மகளான மீரா (வயது 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தேனாம்பேட்டை போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12ஆம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது அறையில் வழக்கம் போல் உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3.00 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி அவரது மகளின் அறைக்கு சென்றபோது மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதனையடுத்து வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் வீட்டிலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தேனாம்பேட்டை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.


-இந்திய ஊடகம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.