சிங்கப்பூர் ஹோட்டலில் மனைவியை குத்தி கொலை செய்த 30 வயது இலங்கையர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிங்கப்பூர் ஹோட்டலில் மனைவியை குத்தி கொலை செய்த 30 வயது இலங்கையர்!


சிங்கப்பூரில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிங்கப்பூரின் ஈஸ்ட்கோஸ்ட் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியை கொலை செய்த நபர் இலங்கையைர் ஒருவர், அதன்பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்துதான் கொலை செய்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.


அவருக்கு எதிராக சிங்கப்பூர் பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.


சிங்கப்பூரின் கட்டொங்கில் உள்ள ஹொலிடே இன் எக்ஸ்பிரசில் தங்கியிருந்த இலங்கையரான ஈசன் தாரக கொட்டாகே எனும் 30 வயதுடையவர் தனது மனைவியை குத்திக்கொலை செய்துள்ளார்.


அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்ததை தெரிவித்தவேளையே பொலிஸாருக்கு உண்மை தெரியவந்துள்ளது.


இதனை தொடர்ந்து பொலிஸார் குறிப்பிட்ட ஹோட்டலிற்கு சென்றவேளை அங்கு பாதிக்கப்பட்டவர் அசைவற்ற நிலையில் காணப்பட்டதை கண்டுள்ளனர். அங்கு காணப்பட்ட துணைமருத்துவ பிரிவினர் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.


கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஹோட்டல் அறையிலிருந்து கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


திங்கட்கிழமை சந்தேகநபர் வீடியோ அழைப்பு மூலம் நீதிமன்றத்திற்கு நடந்ததை தெரிவித்துள்ளார்.


குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்கொள்ளுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.