மதுபானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்காது தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுபானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்காது தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர்!


மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது முச்சக்கர வண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை  பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று மதுபானசாயில் அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாக தெரிவித்து மதுபானத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுக்காது முச்சக்கரவணடியில் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிசி கமராவில் பதிவாகியதுடன் அது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகியது. 


இந்நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகர் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவராவார்.


அவர் சம்பவதினத்தன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இந்த மோசடியில் ஈடுபட்ட பின்னர் அவர் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு  திரும்பாது தலைமறைவாகியுள்ளார். 


குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டு மற்றும் இதுபோன்று 07 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 07 முறை பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில்  இணைக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.