மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது!


மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் பேணப்படும் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பில் தேசபந்து தென்னகோன் தெரிவிக்கையில்,   


"தேசபந்து தென்னகோன் என்ற பெயரில் தன்னால் பராமரிக்கப்படும் எனது முகநூல் பக்கத்துக்குள் யாரோ அத்துமீறி நுழைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


எனவே, இந்த முகநூல் பக்கம் மூலம் எந்தத்  தகவலையும் வெளியிட மாட்டேன், அதற்குப் பதில் அளிக்கவும்  மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.  


அந்த முகநூல் பக்கத்தை மீட்டெடுக்கவும், வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்" என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.