பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 பேர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 பேர் கைது!


மேல் மாகாணத்தின் கோரக்காபொல பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


லங்காதீபவின் தகவலின்படி , காலி வீதியில் நடத்தப்படவுள்ள மோட்டார் சைக்கிள் போட்டி தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் கோரக்காபொல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் போட்டியை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மொரட்டுவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


சந்தேகநபர்கள் ஒன்பது பேருடன் நான்கு மோட்டார் சைக்கிள்களையும் பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.