advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாக்லேட்டினுள் மனித விரல்; மஹியங்கனையில் சம்பவம்!


மஹியங்கனை பொது வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் பெறப்பட்ட சாக்லேட்டினுள் மனித விரல் ஒன்று காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நேற்று மாலை சுமார் 3.00 மணியளவில் மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் சாக்லேட் ஒன்றை வாங்கியுள்ளார்.


வாங்கிய சாக்லேடினை உண்ணும் போது மிகவும் கடினமாக முறையில் வாயில் கடிபட்டதை தொடர்ந்து அதை கழுவி பார்த்த போது நகத்துடன் கூடிய விரல் பகுதி ஒன்று காணப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


-ராமு தனராஜா


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.