நேற்றைய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் வெளியானது!


சீனன்குடாவில் நேற்று (07) இடம்பெற்ற விமான விபத்தின் போது உயிரிழந்த விமானி 2012 இல் பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த பிடி- 6 பயிற்சி விமானத்தின் விமானி தரிந்து ஹேரத் 2012 இல் தும்மசூலரிய என்ற இடத்தில் இடத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்.


2012 பெப்ரவரி 13ஆம் திகதி அவரது மிக் 27 போர் விமானம் தென்னந்தோப்பில் விபத்துக்குள்ளானவேளை இவர் பரசூட்டை பயன்படுத்தி விமானத்திலிருந்து தப்பித்தார்.


பயிற்சியின்போதே இந்த விபத்தும் இடம்பெற்றது.


குருநாகல்மலியதேவ கல்லூரியின் மாணவனான இவர்  2006 இல் இலங்கை விமானப்படையில் இணைந்தார். மேலும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என விமானப்படை தெரிவித்துள்ளது.


இதில் உயிரிழந்த மற்றையவர், குருநாகல் புனித அன்னாள் கல்லூரியின் மாணவரான விமானப் பொறியியலாளர் / பறக்கும் அதிகாரி பெஷான் வர்ணசூரிய, ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை முடித்த பின்னர் 2017 இல் விமானப்படையில் இணைத்தவராவார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.