பெண்களுடன் நிர்வாணமாக தகாத செயலில் ஈடுபட்ட பிக்கு கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்களுடன் நிர்வாணமாக தகாத செயலில் ஈடுபட்ட பிக்கு கைது!


நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்கு சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.


பிரதேசத்தில் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பிக்குவை பொலிஸாருக்கு அழைத்து சாட்சியங்களை பதிவு செய்து கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


இந்த தேரர், தாய், மகள் எனக் கூறப்படும் இரண்டு பெண்களுடன் அந்த அறையில் நிர்வாணமாக இருந்த வேளையில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டார். அதன்பின்னர் மூவர் மீதும் அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.


இதன்பின்னர், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.