ஹம்தியில் செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் ஒட்­டி­யி­ருந்­த­தா­லேயே மற்­றைய சிறு­நீ­ரகம் செய­லிழந்­தி­ருக்கும் என நான் எண்ணு­கிறேன்! -வைத்­தி­ய­சா­லை பணிப்­பாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹம்தியில் செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் ஒட்­டி­யி­ருந்­த­தா­லேயே மற்­றைய சிறு­நீ­ரகம் செய­லிழந்­தி­ருக்கும் என நான் எண்ணு­கிறேன்! -வைத்­தி­ய­சா­லை பணிப்­பாளர்


முஹம்­மது ஹம்தி எனும் சிறு­வ­னுக்கு ஏற்­பட்ட நிலை தொடர்பில் விசா­ர­ணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் ஜீ. விஜ­ய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.


இது தொடர்­பாக அவர் தெரி­விக்­கையில்,


செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் பிறப்­பி­லேயே மற்­றைய சிறு­நீ­ரகம் ஒட்­டி­யி­ருந்­த­தா­லேயே மற்­றைய சிறுநீரகமும் செய­லிழந்­தி­ருக்கும் என நான் எண்­ணு­கிறேன். அதன் கார­ண­மா­கவே செய­லி­ழந்த சிறுநீரகத்தை அகற்றும்போது மற்­றைய சிறு­நீ­ர­கமும் நீக்­கப்­பட்­டுள்­ளது. 


இந்த விடயத்தில் சிறுவனின் பெற்­றோ­ரி­ட­மி­ருந்து எனக்கு எவ்­வித முறைப்­பாடும் கிடைக்­க­வில்லை.


மேலும், சத்­திர சிகிச்சை மேற்­கொண்டு 7 மாதங்கள் கடந்­துள்­ளன. 


இந்­நி­லையில், இந்த சத்­திர சிகிச்சை மேற்கொண்ட விசேட சத்­திர சிகிச்சை நிபுணர் தற்­போது நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ளார்.


இருப்­பினும், அதன் பின்னர் சிகிச்சைகளை மேற்­கொண்ட வைத்­தி­யர்­க­ளிடம் வாக்­கு­மூ­லங்­களை பெற்றுக்கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்கொள்ளு­மாறு நான் பிரதிப் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன் என்றார்.


இதே­வேளை, பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் மூலம் சிறுவன் தொடர்பில் இடம்­பெற்ற அனைத்து விட­யங்­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும் என அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் ஊடகப் பேச்­சாளர் வைத்­தியர் சம்மில் விஜே­சிங்க தெரி­வித்தார்.


அவர் மேலும் இது தொடர்பில் கூறுகையில்,


இவை தனித்து எடுத்த தீர்­மா­னங்கள் அல்ல. சிறுவர் நோய் விசேட நிபு­ணர்கள், சிறு­நீ­ரகம் தொடர்­பான நிபுணர்கள், கதி­ரி­யக்­க­வி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட பலரும் இத­னுடன் தொடர்புபட்­டுள்­ளார்கள். 


மருத்­துவ அறிக்­கை­க­ளுக்கு ஏற்ப அனை­வரும் இணைந்தே இந்த தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளனர்.


எனினும், பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் மூலம் இடம்­பெற்ற அனைத்து விட­யங்­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும். சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை இல்லாமல் செய்ய சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


-எம்.வை.எம். சியாம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.