தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்!


மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது.


பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய தனலட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார். 


மஸ்கெலிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், ஹட்டன் மாவட்ட நீதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டது.


அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு ஹட்டன் மாவட்ட பதில் நீதிபதி வருகைதந்து சடலத்தை பார்வையிட்டார். 


அதன் பின்னர், பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


தற்போது சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.