பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 44 பேர் வரை உயிர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 44 பேர் வரை உயிர் பலி!


வடமேற்கு பாகிஸ்தானில் பாஜூர் - கர் பகுதியில் நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.


அத்துடன் 19 பேர், படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், 100க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைகளுக்காக பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பிரும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.