முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஆகியவையே உரித்துடையவை.


ஆனால் கடந்த காலங்களில் தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ் இணைக்கப்பட்டன.


இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கேள்விக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் ஜனாதிபதி செயற்படும் சிறப்புரிமைகள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதன்படி, இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகளை வழங்கும் போது, ஜனாதிபதி சிறப்புரிமை சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்க வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.