17 வயது சிறுமியை காணவில்லை! பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

17 வயது சிறுமியை காணவில்லை! பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!


நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சிறுமியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன்படி, குறித்த இளம்பெண் காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எனவே இவ்விடயம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


OIC நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் – 0718 591 630


நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் – 0312 222 227


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.