தனது குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது குழந்தை மீது கொதிநீரை ஊற்றிய தந்தை!


தனது கடைசி பிள்ளையான மூன்று வயது குழந்தை மீது கொதி நீரை வீசிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


போதை தலைக்கேறிய நிலையிலேயே தந்தை இந்த செயலை செய்துள்ளார். 


இந்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளின் தாயார் கொழும்பில் பணியாற்றி வருகின்றார். அவரது ஆறு பிள்ளைகளும் அம்மம்மாவின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றன.


இந்நிலையில், மதுபோதையில் வந்த தந்தை தனது ஆறாவது பிள்ளையான மூன்று வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றியுள்ளார்.


இதனால் எரிகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.