பொதுமக்களுக்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்!


சமீபத்தைய சுகாதார பிரச்சினைகள் குறித்து மக்கள் அச்சமடையக்கூடாது என இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கையில் தரம் குறைந்த மருந்துகள் தொடர்பிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மக்கள் அவ்வாறான சம்பவங்களினால் அச்சமடையக்கூடாது; இலவச சுகாதார சேவைகள் குறித்து நம்பிக்கை இழக்ககூடாது என இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கையின் சுகாதார துறை சவால்களை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஒரு சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து முழு சுகாதார சேவையையும் மதிப்பிடுவது நியாயமில்லை என தெரிவித்துள்ளார்.


மருத்துவமனைகளில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு தரமற்ற மருந்துகளே காரணமா என உரிய விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் தீர்மானங்களிற்கு வரவேண்டும் என வைத்தியர் வின்யா ஆரியரட்ண  தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் அரசாங்க மருத்துவமனைகளிற்கு கிசிச்சைகளிற்காக தொடர்ந்தும் வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.