துருக்கியில் தடை செய்யப்பட்ட அமைப்பை இலங்கையில் இருந்து அகற்ற முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துருக்கியில் தடை செய்யப்பட்ட அமைப்பை இலங்கையில் இருந்து அகற்ற முடிவு!


துருக்கியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என  இலங்கைக்கான துருக்கி தூதுவர் டெமெட் செகெர்சியோ குளுதெரிவித்துள்ளார்.


2016 சதிப்புரட்சிக்கு காரணமான Fethullahist என்ற அமைப்பே இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மூலம் தனது நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து அகற்ற முடிந்துள்ளதாக துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான விழிப்புணர்வையும் பதில் நடவடிக்கையையும் கட்டியெழுப்புவதற்காக இலங்கையுடன் துருக்கி புலனாய்வு தகவல்களை பரிமாறி வருகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.