துருக்கியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என இலங்கைக்கான துருக்கி தூதுவர் டெமெட் செகெர்சியோ குளுதெரிவித்துள்ளார்.
2016 சதிப்புரட்சிக்கு காரணமான Fethullahist என்ற அமைப்பே இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மூலம் தனது நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து அகற்ற முடிந்துள்ளதாக துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான விழிப்புணர்வையும் பதில் நடவடிக்கையையும் கட்டியெழுப்புவதற்காக இலங்கையுடன் துருக்கி புலனாய்வு தகவல்களை பரிமாறி வருகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.