அடுத்து ஒரு தேர்தல் என்றால் அது ஜனாதிபதி தேர்தலே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்து ஒரு தேர்தல் என்றால் அது ஜனாதிபதி தேர்தலே!


அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.


பதுளையில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்னபிரிய, இந்த வருடம் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தெரிவித்தார்.


“இந்த ஆண்டு தேர்தல் இல்லை. 2024 தேர்தல் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலே அடுத்த வருடம் நடைபெறவுள்ள முதலாவது தேர்தலாக இருக்கும் என நாம் அறிந்து கொண்டோம். 2024ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக மக்கள் ஆணையுடன் தெரிவு செய்ய வேண்டும் என நான் முன்மொழிகிறேன்” என்று அவர் கூறினார். 


ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், “கடந்த கால அரசியல் தலைவர்களால் நாட்டை ஆள முடியவில்லை என்பதை உணர்ந்ததன் காரணமாகவே நாங்கள் வெளியே வந்து மாற்றத்தை நாடினோம். பொதுவாக, ஒரு நாடு வீழ்ச்சியடையும் போது அது எதிர்க்கட்சித் தலைவரால் கைப்பற்றப்படும். ஆனால், அது இங்கு நடைபெறவில்லை” என்றார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.